Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுக்கோட்டை: உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

ஆகஸ்டு 17, 2019 05:01

புதுக்கோட்டை: உடல் உறுப்புதானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுக்கோட்டையில், பத்தாயிரம் பேர் கொண்ட பிரம்மாண்டமான மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. 

புதுக்கோட்டையில் இன்று காலை மாரத்தான் ஓட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பழைய பேருந்து அருகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

முன்னதாக இந்த நிகழ்வு குறித்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானத்துக்காக காத்திருப்போர் பட்டியல் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளால் குறையும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஆசிய சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.


 

தலைப்புச்செய்திகள்